அன்பே வா!
காய்ந்து போன மொட்டாய்
கலைந்து போன பொட்டாய்
நையிந்து போன பட்டாய்
நயம் பெறாத மெட்டாய்
நோய்ந் திருக்க விட்டாய்
நொடி யுகமாய்ச் சுட்டாய்
வாய் இனிக்கும் மிட்டாய்
நீ வந்து விடு சிட்டாய்!
செல வழித்த சொத்தாய்
சீர ழிந்த வித்தாய்
மலர் பறித்த கொத்தாய்
மன தரிக்கும் பித்தாய்
சிலு சிலுக்கும் மத்தாய்
நீ சிந்தை கலங்க வைத்தாய்
வலு பெருக்கும் சத்தாய்
நீ வா வா வா முத்தாய்!
பாடு குயில் விடிவாய்
பஞ்சு தென்றல் படிவாய்
கூடு நல்ல முடிவாய்
கொஞ்சு தமிழ் வடிவாய்
நாடி இங்கு வருவாய்
நெஞ்சி லின்பம் தருவாய்
கோடி கோடித் திருவாய்
என் களஞ்சியமாய் உருவாய்!