காதல் நியதி!
காற்றும் பனித் துளியும், பெண்ணே பெண்ணே - ஒன்று
கலந்திடுதல் காண்பாய் நீ, பெண்ணே பெண்ணே - சுனை
ஊற்றும் நதி அண்டி, பெண்ணே பெண்ணே - மிக்க
உவகையுடன் உடல் சேர்க்கும், பெண்ணே பெண்ணே - அந்த
ஆற்றும் சமுத்திரத்தில், பெண்ணே பெண்ணே - அன்பு
சங்கமம்தான் கொள்வது பார், பெண்ணே பெண்ணே - இவை
ஏற்றும் இணைந் தென்ன, பெண்ணே பெண்ணே - இன்று
என்னை நீ இணைந்திடலால், பெண்ணே பெண்ணே!
உலவிவரும் வெண் மேகம், பெண்ணே பெண்ணே - மலை
உச்சிதனை முகர்வது காண், பெண்ணே பெண்ணே - வாச
மலரதனின் இதழ் அப்பி, பெண்ணே பெண்ணே - வண்டு
மொய்ந்தாடி ரீங்கரிக்கும், பெண்ணே பெண்ணே - அங்கு
குலவிவரும் பறவையினம், பெண்ணே பெண்ணே - கொஞ்சி
அலகுகளை சேர்ப்பது பார், பெண்ணே பெண்ணே - முத்தம்
உலகசம நியதி எனில், பெண்ணே பெண்ணே - எனக்கு
ஒன்றும் நீ தந்திடலால் பயன் தான் என்னே?
(ஷெல்லியின் “Love’s Philosophy” மையமாய் வைத்து எழுதியது, நண்பர் ஜெமினி கணேசன் கேட்டதற்காக.)