நீ ஒரு கவிதை!
உன் புன்னகை பொன்னுதிர் காலையின் உதிப்பு
உன் பற்களோ பொலிவைர மாலையின் பதிப்பு
உன் கன்னங்கள் சிரித்திடும் மாம்பழக் கதுப்பு
உனைப் பார்த்திடப் பார்த்திட நேத்திரத் திதிப்பு
உன் அழகது ஆச்சரியக் குறியதின் மதிப்பு
உன் அறிவது சிந்தனை நெருப்பதின் கொதிப்பு
உன் புகழது பௌர்ணமி சமுத்திரத் துதிப்பு
நீ பொக்கிஷ உண்டியல் நாணயக் குதிப்பு
உன் குரலிசை இனிமைதான் குயிலினம் அளிப்பு
உன் குடைஇமை சிமிட்டிடும் தாரகை பளிப்பு
உன் உரசலில் தென்றலும் காணுமே களிப்பு
உன் முறுவலின் எதுகையோ வானவில் நெளிப்பு?
உன் நடையது ஒயிலுறும் நதியதன் நடிப்பு
உன் நளினமோ மயிலினம் பழகிடும் படிப்பு
உன் இடையது குறுகிய கிடுக்கையின் ஒடிப்பு
உன் கடைவிழி மன்மதன் கணைதனின் துடிப்பு
உன் மொழியது தமிழ்மலர் தோரணத் தொடுப்பு
உன் குளிர்முகம் மார்கழிப் பனித்திரை உடுப்பு
உன் எழிலது கற்பனைத் தோணியின் துடுப்பு
நீ இல்லாது எரியாது பாவலன் அடுப்பு